search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் விசாரணை"

    திருவண்ணாமலையில் ஆயுதபடை பெண் போலீஸ் தனது கையை கத்தியால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ஓவியா (வயது22). இவர், திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குமரேசன். இவரும் விழுப்புரம் ஆயுதபடை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.

    ஓவியா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓவியா கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டு மயங்கி கிடந்தார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்ததும் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஓவியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆயுதபடை பெண் போலீசாரான ஓவியா கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து அடிப்படை பயிற்சிகளை முடித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது.

    போலீஸ் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ள பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×